இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எழுமின் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு கலந்து கொண்டனர். விழாவில் சிம்பு பேசியதாவது.... என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப போவது கிடையாது. குழந்தைகளை பள்ளிக்கு கற்று கொள்ள தான் அனுப்புகிறோம். ஆனால் அங்கு யார் முதலில் வருவான் என பார்க்கிறார்கள். அனைவரும் கற்க வேண்டும் என நினைப்பதில்லை. பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் திறமையை புரிந்து நடக்க வேண்டும்.
நடிகர் சங்க தேர்தலின் போது விஷாலின் பேச்சில் எனக்கு முரண்பாடு இருந்தது. அதனால் அவர் மீது கோபப்பட்டு திட்டியிருக்கிறேன். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவன் நான். ஆனால் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார். அதற்காக நன்றி சொல்கிறேன்.
எனக்கு பிடித்தமாதிரி வாழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பிற்கு நான் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள். இனி அப்படி வர மாட்டேன்.
பேனர் வைக்கும் தகராறில் ரசிகர் இறந்தது வருத்தம் அளித்தது. அவரை கொலை செய்ததால் அந்த 9 பேரின் வாழ்க்கையும் வீணாகிவிட்டது. இனி யாரும் எனக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம்.
இவ்வாறு சிம்பு பேசினார்.