ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் மாறின. பா.ஜ., பெரும்பான்மையை பெறாவிட்டாலும் அதிக தொகுதிகளில் வென்ற தனிபெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இதனால், பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்று, பின்னர் தானாகவே ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது... “கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை. இனி வண்ணமயமான விஷயங்கள் தொடர இருக்கிறது. 'மேட்ச்' தொடங்கும் முன்பே ஆட்டம் முடிந்து விட்டது. 55 மணிநேரம் கூட இந்த ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மக்கள் பக்கம் நிற்பேன்” என்று பா.ஜனதாவை கிண்டல் செய்து டுவிட்டரில் எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.