பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
நடிகர் பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் மாறின. பா.ஜ., பெரும்பான்மையை பெறாவிட்டாலும் அதிக தொகுதிகளில் வென்ற தனிபெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இதனால், பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்று, பின்னர் தானாகவே ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது... “கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை. இனி வண்ணமயமான விஷயங்கள் தொடர இருக்கிறது. 'மேட்ச்' தொடங்கும் முன்பே ஆட்டம் முடிந்து விட்டது. 55 மணிநேரம் கூட இந்த ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மக்கள் பக்கம் நிற்பேன்” என்று பா.ஜனதாவை கிண்டல் செய்து டுவிட்டரில் எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.