பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி நடிக்கும் இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறைந்து வரும் சம்படி ஆட்டக் கலையை பயன்படுத்தி உள்ளனர்.
இரண்டு பேர் கதையை பாடலாக சொல்லி ஆடும் ஆட்டம் இது. இப்போது இது அரிதாக இருக்கிறது. சம்படி ஆட்டத்தில் பிரபலமான அந்தோணி தாசையே பாடவும், ஆடவும் வைத்திருக்கிறார்கள். பாடலை இயக்குனர் மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன. அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால் வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள். அசல் கிராமத்தையும் கிராமத் திருவிழாவையும் கண்முன்னே நிறுத்தும் இந்தப்பாடலில் 90களில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற சம்படி ஆட்டக்கலைஞராக கலக்கிய அந்தோணி தாசன் மற்றும் இன்று கொண்டாடப்படும் சம்படி ஆட்டக்கலைஞரான கல்லூர் மாரியப்பன் இருவரின் பாடலுடன் கதைநாயகன் கதிர், கதைநாயகி ஆனந்தி மற்றும் ஊர் மக்கள் போடும் ஆட்டமும் அப்படியே படமாக்கப்பட்டுள்து.
ஒரு கிராமத்து விழாவில் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தரும். முதல்முறை கேட்கும்போதே அனைவரையும் தலையாட்ட வைக்கும் இந்தப்பாடல் படத்தில் பார்க்கும்போது நிச்சயம் வேறு ஒரு அனுபவத்தை தரும். என்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.