Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலசந்தருக்கு நன்றிகடன் செலுத்த என் வாழ்நாள் போதாது: பிரகாஷ்ராஜ்!

02 ஏப், 2012 - 12:11 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய என் குருநாதர் பாலசந்தருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டு‌ள்ளேன். அந்த நன்றியை செலுத்த என் வாழ்நாள் போதாது என்று உணர்ச்சி பொங்க கூறியிருககிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். எப்பேற்பட்ட கதாபாத்திரத்திலும் அசல்ட்டாக நடித்து பெயர் வாங்கும் வல்லமை படைத்தவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என் பன்முகம் கொண்ட பிரகாஷ்ராஜ். டைரக்டர் பாலசந்தரால் டூயட் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் இன்று தேசிய விருது வாங்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜூக்கு ஐதராபாத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் பிரகாஷ்ராஜூக்கு நடிகர்கள் சி்தார்த் மற்றும் சுனில் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். பின்னர் விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ், நான் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி விழாவில் நடந்த நாடகம் ஒன்றில் நடித்தேன். அப்போது என்னுடைய நடிப்பை பார்த்து பலரும் கைதட்டி பாராட்டினார்கள். அந்த உற்சாகம் என்னை நடிகனாக்கியது. இப்போதும் சினிமாவில் பணம் சம்பாதிக்க நடிக்கவில்லை. பெயர், புகழ் மற்றும் கைத்தட்டலுக்காகவே நடிக்கிறேன். மேலும் இந்த தருணத்தில் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய என் குருநாதருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் இந்த நன்றியை சொல்ல என் வாழ்நாள் ‌போதாது. அதேபோல் தெலுங்கில் கிருஷ்ணவம்சி, பூரி ஜெகன்நாத், திரிவிக்ரம், குணசேகர், விநாயக் ஆகியோருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

லதா ramani - chennai,இந்தியா
04 ஏப், 2012 - 12:20 Report Abuse
 லதா ramani கருத்து சொல்லும் நம்ம ஊர் ஆண்களை(?????) காணவே இல்லை. இந்த வெறியனுக்கு ஜால்ரா தட்ட ஒரு பயலையும் காணவில்லை.
Rate this:
கண்ணகி sridhar - madurai,இந்தியா
03 ஏப், 2012 - 03:02 Report Abuse
 கண்ணகி sridhar பெண் பித்தா,,,,அனாதையாக அலைந்த உன்னை சென்னைக்கு கொண்டு வந்து தங்கும் இடம் தந்து, நடிக்க சந்தர்ப்பம் வாங்கி தந்து, உனக்கு வாழ்க்கை தந்து உன்னை ஒரு குடும்பமாக மாற்றிய உன் மனைவிக்கு நன்றி கடன் செய்யவில்லை என்றால் கூட பரவாஇல்லை,,. நீ துரோகம் செய்தாய். இப்போது பாலச்சந்தருக்கு நன்றி கடன் பட்டு இருக்கியா? எப்போ காலை வாரி விட போகிறாய்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in