இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? |
எழுத்தாளரும், சினிமாவில் பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் பணியாற்றிய பாலகுமாரன், சில தினங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினி, சிவகுமார், நாசர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமல், அரசியல் சுற்று பயணத்தில் இருந்ததால் அஞ்சலி செலுத்த வரவில்லை. இந்நிலையில் பாலகுமாரன் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் கமல்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சினிமாவிற்கு முன்பே பாலகுமாரனை எனக்கு தெரியும். சினிமாவிற்கு அவர் வர வேண்டும் என விரும்பியவன் நான். நவயுக சினிமாவை பற்றி நிறையே பேசியிருக்கிறோம். தமிழ் சினிமாவை எப்படி மாற்றலாம் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அற்புதமான எழுத்தாளர், நெருப்பு போன்று எழுதுபவர். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினோம். நன்றாக வாழ்ந்து சென்றிருக்கிறார். தமிழுக்கு அவர் கொடுத்து சென்ற பரிசுக்கு நன்றி.
இவ்வாறு கமல் கூறினார்.