வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
எழுத்தாளரும், சினிமாவில் பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் பணியாற்றிய பாலகுமாரன், சில தினங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினி, சிவகுமார், நாசர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமல், அரசியல் சுற்று பயணத்தில் இருந்ததால் அஞ்சலி செலுத்த வரவில்லை. இந்நிலையில் பாலகுமாரன் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் கமல்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சினிமாவிற்கு முன்பே பாலகுமாரனை எனக்கு தெரியும். சினிமாவிற்கு அவர் வர வேண்டும் என விரும்பியவன் நான். நவயுக சினிமாவை பற்றி நிறையே பேசியிருக்கிறோம். தமிழ் சினிமாவை எப்படி மாற்றலாம் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அற்புதமான எழுத்தாளர், நெருப்பு போன்று எழுதுபவர். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினோம். நன்றாக வாழ்ந்து சென்றிருக்கிறார். தமிழுக்கு அவர் கொடுத்து சென்ற பரிசுக்கு நன்றி.
இவ்வாறு கமல் கூறினார்.