டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர் மீது பாலியல் குற்றசாட்டுகளை தொடர்ந்து கூறிவருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் பாலியல் குற்றங்கள் என்ற தலைப்பில் ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கு இயக்குனார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நடிகையை படுக்கைக்கு அழைக்கிறவர்கள்தான். அவர்களின் பாலியல் தொல்லைகளை நடிகைகள் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தங்கள் வாய்ப்பு பறிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். எதிர்காலம் பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். இந்த பயமே இயக்குனர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் ஒரு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே அவர் தன் படுக்கையை பகிர்ந்து கொள்வாரா என்றுதான் பார்க்கிறார்கள்.
பாலியல் தொல்லை மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்கள். நடிகர்களுக்கு 10 கோடி சம்பளம் கொடத்தால், நடிகைக்கு ஒரு கோடி கொடுக்க தயங்குகிறார்கள். இந்த வேற்றுமை களையப்பட வேண்டும். நடிகைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் குற்றம் புரிகிறவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். என்றார் ஸ்ரீரெட்டி.