ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக நடிகர் சிம்பு ஆளே மாறி வருகிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது, சமூக பணிகளில் ஈடுபடுவது என அனைவரையும் கவனிக்க வைக்கிறார். தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.
சிம்புவின் தீவிர ரசிகரும், அவரின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவருமான மதன் என்பவர், சமீபத்தில் மரணம் அடைந்தார். இதற்காக அன்றே இரங்கல் தெரிவித்திருந்தார் சிம்பு. தற்போது அவர் செய்திருக்கும் ஒரு செயல், ரசிகர்களை நெகிகழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
மதனின் நண்பர்கள், அவரின் நினைவஞ்சலி போஸ்டர்களை சென்னையில் ஒட்டினர். அந்தவழியாக காரில் சென்ற சிம்பு, இதை கண்டதும், தானும் போஸ்டர்களை வாங்கி ஒட்டினார்.
இது அங்கிருந்த ரசிகர்களை நெகழ்ச்சி அடைய செய்ததுடன், சமூகவலைதளங்களில் சிம்பு போஸ்டர் ஓட்டும் போட்டோ மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.