இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என இரண்டு பொறுப்புகளில் இருக்கிறார் நடிகர் விஷால். அவர் தேர்தலில் நின்ற சமயத்திலிருந்தே அவர் ஒரு தெலுங்கர் என்ற குற்றச்சாட்டு அவருடைய எதிராளிகளால் பரப்பப்பட்டு வந்தது.
அந்த எதிர்ப்புகளையும் மீறி அவர் அந்த பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் ஏதாவது அரசியல் செய்து அவரை அந்தப் பதவிகளிலிருந்து தூக்க வேண்டும் என்றும் சிலர் முயற்சித்தார்கள். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. அதனால், மீண்டும் அவரை ஒரு தெலுங்கர் என்று சொல்லி மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்துள்ளார்கள்.
அதுபற்றி விஷால் நேற்று கூறிய போது, “தெலுங்கர், தமிழர் என்று பிரித்து சொல்வதெல்லாம் எனக்கு அசிங்கமாக இருக்கிறது, நான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் தான் பெருமைப்படுகிறேன்,” என்று சொன்னார்.
விஷால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து இதுவரை பல படங்களைத் தயாரித்து தமிழ் தொழிலாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். படங்களே தயாரிக்காத சில தயாரிப்பாளர்கள் அவர் மீது குற்றம் சாட்டுவது எந்த நியாயம் என்றும் அவர் தரப்பில் கேட்கிறார்கள்.
அந்தக் காலத்தில் சென்னை தான் தென்னிந்தியா மொழிகளுக்கான தலைமையிடமாக இருந்தது. தற்போதும் பல மொழிப் படங்களின் வேலை சென்னையில் நடந்து வருகிறது. அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, தமிழ்ப் படத்தின் வேலைகள் மட்டும் இங்கு நடந்தால் மற்றவர்களின் தொழில் எப்படி நடக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.