'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசை அமைப்பாளராக இருந்து நடிகராக வளர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் அவர் தான். இசை அமைப்பாளர், பாடகர், நடிகர் என பல முகங்கள் அவருக்கு இருந்தாலும் இன்னொரு முகம் சமூக சேவகர்.
நாட்டு நடப்புகளை பற்றி உடனுக்குடன் கருத்து சொல்வார். நீட் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம், கதிராமங்கலம் போராட்டம், நெடுவாசல் போராட்டம் என பல போராட்டத்திலும் கலந்து கொண்டார். அதற்கு பண உதவியும் செய்தார். நீட் தேர்வுக்காக அனிதா தற்கொலை செய்து கொண்டபோது முதல் ஆளாக அவர் வீட்டுக்கு சென்று உதவினார். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய முதலில் குரல் கொடுத்த பிரபலம் இவர் தான்.
இப்படியான இவரது சமூக சேவைகளை பாராட்டி செயிண்ட் ஆண்ட்ரீவ் இறையியல் பல்கலைகழகம், ஜி.வி.பிரகாசுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதற்கான விழா பல்கலைகழகத்தில் எளிய முறையில் நடந்தது.
"இந்த பட்டத்துக்கு நான் தகுதியுள்ளவனா என்று தெரியாது. ஆனால் தகுதியுள்ளவனாக என்னை மாற்றிக் கொள்ள தொடர்ந்து உழைப்பேன்" என்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.