வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்தியத் திரையுலகில் வரவேற்பிலும், வசூலிலும் பெரிய சாதனை படைத்த படம் பாகுபலி. இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி இந்திய மக்களை மட்டுமல்லாது உலக அளவிலும் உள்ளவர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்கள் இந்திய மக்களை விட பாகுபலி படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அந்தப் படங்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பலவிதமான பொருட்களைத் தயாரிப்பது, படங்கள் வரைவது என அந்தப் படத்தை வேறுவிதமாக ரசித்தார்கள். படத்தின் தயாரிப்பாளர் ஷோபு, இயக்குனர் ராஜமௌலி ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு பாகுபலி 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இப்போது ஜப்பான் நாட்டில் பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களை வைத்து காமிக்ஸ் புத்தகத்தை உருவாக்கப் போகிறார்களாம். அது பற்றி கருத்து தெரிவித்த ராஜமௌலி, “என்னுடைய சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்போது நான் எடுக்கும் படங்களுக்கம் அது ஒரு உத்வேகமாக இருக்கிறது. ஜப்பான் நாட்டில் பாகுபலி காமிக்ஸ் புத்தக வடிவில் வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்க்கை முழுமையாகி இருப்பதாக நான் கருதுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டு மக்கள் தனக்கு அளித்த பரிசுப் பொருட்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும், அற்புதமானகவும் உள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.