டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் தெலுங்கில் 'மகாநதி' மற்றும் தமிழில் 'நடிகையர் திலகம் என மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி இருந்தது. இதில் ஆச்சர்யப்படும் விதமாக மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் கொஞ்சம் வில்லத்தன்மை சாயலுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ், 'மகாநதி' படத்தில் என் தந்தையை தவறாக சித்தரித்துள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் எனது தந்தை ஜெமினியும் சேர்ந்தே மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர். ஆனால் எனது தந்தையை பட வாய்ப்பே இல்லாத நடிகர் போல காட்டியுள்ளார்கள். மேலும் சாவித்திரிக்கு குடிக்கும் பழக்கத்தை தூண்டிவிட்டதே என் தந்தை தான் என காட்டியுள்ளார்கள். இதில் துளியும் உண்மை இல்லை.
சாவித்திரி சிவாஜியை வைத்து தமிழில் 'பிராப்தம்' படத்தை தயாரிக்க முடிவு செய்த போது, அது வேண்டாம் என கூறி அவரது மனதை மாற்ற எனது தந்தை ஜெமினி கணேசன் அவரை தேடிச்சென்றார்.. ஆனால் அவரை உள்ளே நுழையவிடாமல் காவலாளியையும் நாயையும் விட்டு துரத்தினார் சாவித்திரி. அதனாலேயே அதன்பின்னர் என் தந்தை, சாவித்ரியை பார்க்க செல்வதை நிறுத்திவிட்டார்” என கோபமாக கூறியுள்ளார் கமலா செல்வராஜ்.