இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இலங்கை உள்நாட்டு போரில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா கேரக்டரில் போர்களத்தில் ஒரு பூ என்ற படத்தில் நடித்தவர் தன்யா என்கிற ப்ரியா. அவர் நடித்துள்ள 18.05.2009 என்ற படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தன்யா தன்னை மர்ம நபர்கள் சிலர் போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் என் அம்மாவுடன் வசித்து வருகிறேன். தந்தை இறந்துவிட்டார். சினிமாவில் “போர் களத்தில் ஒரு பூ” மற்றும் 18.05.2009 என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளளேன். அதுமட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளேன். இந்நிலையில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு 1.16 மணிக்கு எனது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் “நீ தானடி 18.05.2009 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தாய், உனக்கு வெட்கமா இல்லையாடி, நிர்வாணமாய் நடித்துள்ளாய் என்று கூறி மிகவும் கேவலமான வார்த்தைகளால் என்னை திட்டினார்.
இதனால் நான் மிகவும் பயத்துடன் பதற்றத்துடன் அந்த நபரிடம் நான் ஒரு நடிகை, எதுவாக இருந்தாலும் இயக்குநரையோ அல்லது திரைப்படத்தின் தயாரிப்பாளரையோ அணுகி பேசிக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அதற்கு அந்த நபர், நீ தனியாகத்தானே இருக்க, எப்படி வெளிய வரேணு பார்க்கறேன். நான் யாருன்னு உனக்கு தெரியாது, உன்ன என்ன வேணாலும் என்னால் பண்ண முடியும். 18.05.2009 படம் ரிலீஸ் ஆச்சினா உன்ன எப்படியும் நாங்க போட்டு தள்ளிடுவோம்” என்று கொலை மிரட்டல் விடுத்து போனை துண்டித்து விட்டார்.
இதனால் நானும் என் அம்மாவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயந்து வாழ்ந்து வருகிறோம். செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.