ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரகாஷ்ராஜின் தோழியும், பத்திரிகையாளரும் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் எல்லாவற்றையும் மீறி பா.ஜ., பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான என்கவுன்ட்டர் தொடங்கி விட்டது. யார் எங்கு தாவினார்கள், எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் போன்ற செய்திகள் எல்லாம் வர தொடங்கும். அரசியல் சாணக்கியங்களை கண்டு மகிழுங்கள்.
அரசியல்வாதிகளின் விளையாட்டின் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படி மாற்றப்படுகிறது. நம் நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றை எல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுபோவாம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.