'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரகாஷ்ராஜின் தோழியும், பத்திரிகையாளரும் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் எல்லாவற்றையும் மீறி பா.ஜ., பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான என்கவுன்ட்டர் தொடங்கி விட்டது. யார் எங்கு தாவினார்கள், எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் போன்ற செய்திகள் எல்லாம் வர தொடங்கும். அரசியல் சாணக்கியங்களை கண்டு மகிழுங்கள்.
அரசியல்வாதிகளின் விளையாட்டின் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படி மாற்றப்படுகிறது. நம் நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றை எல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுபோவாம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.