பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்வதில்லை.
தம்பி ராமைய்யாவின் மகன் நடித்த அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் ஆடியோ விழாவில் கலந்த கொண்டபோது, சின்ன தளபதி சிவகார்த்திகேயன் என்று அவரை குறிப்பிட்டபோது, அப்படியெல்லாம் சொல்லாதீங்க நான் ரொம்ப சாதாரணமான நடிகன். எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்று சொன்னார்.
அதையடுத்து நேற்று சென்னையில் ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், ரஜினி, கமல் விஜய், அஜித் இவங்கதான் ஹீரோ. நானெல்லாம் ஹீரோவே கிடையாது. லீடு கேரக்டர்ல நடிக்கிற ஒரு நடிகன் அவ்வளவுதான் என்று தன்னை தாழ்த்திக் கொண்டு பேசினார்.
மேலும், ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு போக வேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம் என்றார்.