ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து ஏராளமான பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் உங்களை பாதித்த அல்லது கவர்ந்த விசயம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைக்கேட்டபோது கண்கலங்கி விட்டேன். ஓகோவென்று வாழ்ந்த ஒரு நடிகை, படம் தயாரித்து ஏழையாகி விட்டார். ஆனால் தான் கஷ்டப்பட்டபோதும் மற்றவர்களின் கஷ்டத்தை அறிந்தால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இந்த மனசு யாருக்குமே வராது. இருக்கும்போதும் பலரும் கொடுப்பார்கள். ஆனால் தனக்கே இல்லாத போது மற்றவர்களுக்கு உதவும் மனசு எத்தனை பேருக்கு வரும். அந்த வகையில், நடிகை சாவித்ரி மனதளவில் உயர்ந்தவர். அவரது வேடத்தில் நடித்ததை பெருமையாகவும், உயர்வாகவும் நினைக்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.