தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழுவை நியமித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகி தேவையில்லாத போட்டி உருவாவதை குறைத்து வருகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தும் சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதர்வா நடித்துள்ள 'செம போத ஆகாதே' படம் முதலில் மே 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் வெளியீட்டை மே 25ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாவது பற்றி கூட நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இது ரசிகர்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். இப்போது இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளிவந்தால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் நிச்சயம் குழம்பிப் போவார்கள். தயாரிப்பாளர் சங்கம் இப்படிப்பட்ட குழப்பங்களுக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்ட வேண்டும்.