'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழுவை நியமித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகி தேவையில்லாத போட்டி உருவாவதை குறைத்து வருகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தும் சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதர்வா நடித்துள்ள 'செம போத ஆகாதே' படம் முதலில் மே 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் வெளியீட்டை மே 25ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாவது பற்றி கூட நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இது ரசிகர்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். இப்போது இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளிவந்தால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் நிச்சயம் குழம்பிப் போவார்கள். தயாரிப்பாளர் சங்கம் இப்படிப்பட்ட குழப்பங்களுக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்ட வேண்டும்.