பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழுவை நியமித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகி தேவையில்லாத போட்டி உருவாவதை குறைத்து வருகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தும் சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதர்வா நடித்துள்ள 'செம போத ஆகாதே' படம் முதலில் மே 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் வெளியீட்டை மே 25ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாவது பற்றி கூட நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இது ரசிகர்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். இப்போது இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளிவந்தால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் நிச்சயம் குழம்பிப் போவார்கள். தயாரிப்பாளர் சங்கம் இப்படிப்பட்ட குழப்பங்களுக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்ட வேண்டும்.