'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழுவை நியமித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகி தேவையில்லாத போட்டி உருவாவதை குறைத்து வருகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தும் சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதர்வா நடித்துள்ள 'செம போத ஆகாதே' படம் முதலில் மே 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் வெளியீட்டை மே 25ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாவது பற்றி கூட நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இது ரசிகர்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். இப்போது இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளிவந்தால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் நிச்சயம் குழம்பிப் போவார்கள். தயாரிப்பாளர் சங்கம் இப்படிப்பட்ட குழப்பங்களுக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்ட வேண்டும்.