நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா இந்து கடவுள்களை விமர்சித்தும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன், வடபழனி போலீசில் புகார் செய்தார், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போலீசார் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக வடபழனி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்தது.