தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த பிலிம் சிட்டி அங்கு டைடல் பார்க் வந்ததால் மூடப்பட்டது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாகவும், மத்திய அரசுக்கு வருமான வரியாகவும், ஜிஎஸ்டி வரியாகவும் தரும் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு சென்னையில் படப்பிடிப்பு நடத்த பெரிய வசதிகள் எதுவும் இல்லை.
இங்கு அரசு இடங்களிலோ, பொது இடங்களிலோ படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டும் என்றால் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. மேலும், சென்னையில் இருந்த பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு தற்போது ஏவிஎம், பிரசாத் ஆகிய இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அங்கும் திரைப்படப் படப்பிடிப்புகளை விட டிவி படப்பிடிப்புகள்தான் அதிகம் நடக்கின்றன. சமீபகாலத்தில் பூந்தமல்லியில் உள்ள இவிபி ஸ்டுடியோவில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ரஜினிகாந்த்தின் காலா, 2.0 ஆகிய படங்களின் படப்பிடிப்பு அங்குதான் அதிகம் நடைபெற்றது. ஆனால், அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடப்பதை விட ஹைதராபாத்தில்தான் அதிகம் நடக்கிறது. தற்போது கூட விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில்தான் நடைபெற்று வருகிறது. அங்கு வட சென்னை போன்ற செட்டை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளை தேவை இருந்தால் மட்டும் வெளிமாநிலங்களில் நடத்தலாம், இல்லை என்றால் தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிழைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பு அவர் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தயாரிப்பாளரிடம் சொல்வாரா என இங்குள்ள தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.