'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த 'டெம்பர்' படத்தின் ரீ-மேக்கில் சிம்பு நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சில வருடங்களுக்கு முன் வெளியானது.
தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். போலீஸாக நடித்திருந்தார்.
காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருந்த டெம்பர் 2015-ல் வெளியானது. இந்த படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீ-மேக் ஆக இருப்பதாக அப்போதே தகவல்வெளியாகியிருந்தது.
தமிழில் 'டெம்பர்' படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, ஆதிக்ரவிச்சந்திரன் இயக்க, சிம்பு நடிப்பதாக சொல்லப்பட்டது. கடைசியில் அந்தப் படத்திட்டம் கைவிடப்பட்டது. 3 வருடங்களுக்குப் பிறகு இப்போது 'டெம்பர்' கதையை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த வெங்கட் குமார் இயக்குகிறார். இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அதிரடி போலீஸ்காரராக விஷால் நடிக்கும் இந்த படத்திற்கு 'அயோக்கியா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஷி கண்ணா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருப்பதாகவும், குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள விஷால் சின்ன தொகையை அட்வான்ஸாகப் பெற்றுக்கொண்டு பாக்கியை படம் வெளியான பிறகு வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறார்.
படத்தின் தலைப்பு அயோக்கியாவாக இருந்தாலும் விஷாலின் செயல் அதற்கு மாறாக நியாயமாக உள்ளது.