தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், கன்னியாகுமரியில் இன்று சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்குள்ள காந்தி மண்டபத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய கமல், மக்களிடம் பேசியதாவது...
கன்னியாகுமரிக்கு வந்திருப்பது மக்களை காண மக்களுடன் பேசி அவர்கள் எண்ணம் என்ன என்பதை அறியவே. தமிழகம் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. உங்களுடன் நான் செலவழிக்கும் குறைவான நேரம் எனக்கு நிறைவான பாடமாக இருக்கிறது. சிறிய இடங்கள் ஆனால் பெரிய மனங்களை இங்கு பார்க்கிறேன்.
கேள்வித்தாள்களை தவறாக கொடுத்தாலும் சரியாக எழுதி தேர்ச்சி பெறுபவர்கள் தமிழக மாணவர்கள். எத்தனை தடைகள் வந்தாலும் இன்று தேர்வில் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாளை அவர்களுக்கும் புதிய பயணம் தொடங்க இருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் தமிழகத்திற்கு மிக முக்கியம்.
அரசியல் இப்பொழுது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் நாளை நமதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பயணம். ஒவ்வொரு இடத்தில் என் மேல் உங்களுக்கு உள்ள அன்பு எனக்கு புரிகிறது அதுவே எனக்கு எனது நம்பிக்கையாக மாறுகிறது
தமிழகத்தின் தாக்கமாகவும் தேக்கமாகவும் எது இருக்கிறது என்பதை அறிவது தான் நமது வேலை. இப்பொழுது நான் மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன்.
இவ்வாறு கமல் பேசினார்.