600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்தையும் இயக்குகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் புருவ அழகி பிரியா வாரியர் நாயகியாக நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் கே.வி.ஆனந்த் மறுத்தார். அதோடு முன்னணி நடிகைகளிடம் கால்சீட் பேசி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வனமகன் படத்தை அடுத்து ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா ஆகிய படங்களில் நடித்துள்ள, சாயிஷா சாய்கல் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.