டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த 2010ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது திரைத்துறையினர் வீடு கட்டிக் கொள்ளவும், திரைப்பட அரங்குகள் அமைக்கவும் தமிழக அரசு, பையனூரில் 65 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கியது. அதன்பிறகு வந்த ஆட்சி மாற்றத்தில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
என்றாலும் இந்த இடத்தில் பெப்சி சார்பில் சுமார் 15 ஏக்கரில் பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேய பெரிய படப்பிடிப்பு அரங்கமாக தற்போது உருவாகி உள்ளது. இதன் பணிகள் அடுத்த மாதம் 15ம் தேதி நிறைவடைகிறது.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது: பெப்சி சார்பில் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு அரங்கத்திற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு படப்பிடிப்பு அரங்கம் என பெயர் சூட்டப்படுகிறது. ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது கட்டப்பட்டு இருக்கிறது. ஒரே நேரத்தில் 6 படங்களின் படப்பிடிப்புகளை இங்கே நடத்த முடியும்.
ஜூலையில் திறப்பு விழா இருக்கும். இதை திறக்க தமிழ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்துள்ளோம். அவர் தேதி கொடுத்ததும் திறப்பு விழா நடக்கும். திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 6 ஏக்கரில் 640 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.