ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை டைரக்டர்களிடமிருந்து இரண்டு விசயங்களை எதிர்பார்க்கிறார். ஒன்று தனக்கேற்ற கதைகள். இன்னொன்று தன்னை புரிந்து கொண்டு வேலை வாங்கக்கூடிய டைரக்டர்கள்.
இதுதவிர இன்னொரு டெக்னிக்கையும் தற்போது பின்பற்றி வருகிறார். அதாவது, சிலரிடம் அவர் நட்புக்காக கதை கேட்டு நடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அப்படி நடித்த படங்கள் தோல்விகளை தழுவின. அதனால் தொடர்ந்து தோல்விகள் தன்னை தொடர விரும்பாத விஜய் ஆண்டனி, சில நட்பு வட்டார டைரக்டர்கள், தன்னிடம் கதை சொல்ல வருவதாக சொன்னால், நீங்கள் வர வேண்டாம். நானே உங்கள் இடத்துக்கு வந்து கதை கேட்கிறேன் என்கிறாராம்.
அது எதற்காக என்று கேட்டால், ஒருவேளை அந்த கதை பிடிக்காவிட்டால் அங்கேயே அவர்களை கழட்டிவிட்டு விடலாம் என்பதற்காகத்தானாம். இதை காளி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் விஜய் ஆண்டனி.
மேலும், கிருத்திகா உதயநிதி கதை சொல்ல வருவதாக சொன்னபோது கூட, நானே வந்து கதை கேட்கிறேன் என்று விஜய் ஆண்டனி சொன்னதற்கான காரணம் இதுதானாம்.
அதனால் தான் முதலில் அவர் சொன்ன கதை தனக்கு செட்டாகாது என்றதும் அதில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அதையடுத்து அவர் சொன்ன காளி கதை நிஜமாலுமே பிடித்ததால் தான் நடித்தாராம். நட்புக்காக அந்த கதையில் நடிக்கவில்லை என்கிறார் விஜய் ஆண்டனி.