வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்தியத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் இதுவரை தமிழ்ப் படங்களில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் கூட நடித்தது கிடையாது.
முதல் முறையாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துக் கொண்டிருக்கும் 'சை ரா' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப்பச்சனிடம் கடந்த சில மாதங்களாகப் பேசி வந்தனர்.
ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க அமிதாப்பச்சன் மறுத்துவிட்டார் போலிருக்கிறது. படத்தில் மிகவும் வலுவான கதாபாத்திரமான அதில் வேறு யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என யோசித்தவர்களுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஞாபகம் வந்திருக்கிறது. அவரை அணுகி படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் நடிக்க சம்மதித்துவிட்டார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்து 1994ம் ஆண்டு வெளிவந்த 'தேன்மாவின் கொம்பத்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் கே.வி.ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை கே.வி.ஆனந்த் பெற்றார். அந்தப் படம்தான் பின்னர் ரஜினிகாந்த் நடிக்க 'முத்து' படமாக தமிழிலும் வெளிவந்து வசூல் சாதனை படைத்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மோகன்லால் - கே.வி.ஆனந்த் மீண்டும் இணைய உள்ளனர்.