ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரள தியேட்டர்ஸ் எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக இருந்தவர் லிபர்டி பஷீர். அடிக்கடி தியேட்டர்களை போராட்டம் நடத்த வைத்து பலரின் அதிருப்தியை சம்பாதித்தவர். இவரை எதிர்த்து இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் திலீப் புதிதாக சங்கம் ஆரம்பித்ததுடன், லிபர்ட்டி பஷீரையும் சங்கத்தில் இருந்து நீக்கினார். அதன்பின் லிபர்ட்டி பஷீரின் தியேட்டர்களுக்கு படங்களை கொடுப்பதையும் தடை செய்தார்.
இந்தநிலையில் தான் நடிகை வழக்கில் சிக்கிய நடிகர் திலீப், சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதில் லிபர்ட்டி பஷீர், தன் மீதுள்ள சொந்த பகையினால், இந்த வழக்கில் தனக்கு தொடர்பு உள்ளதாக கூறி, தேவையில்லாமல் தன்னைப்பற்றி பேசிவருவதாக குறிப்பிட்டிருந்தார் திலீப்..
இதை தொடர்ந்து இந்த விபரம் லிபர்ட்டி பஷீருக்கு தெரியவந்துள்ள நிலையில், திலீப் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் தன்னை பற்றி குறிப்பிட்டுள்ள கருத்துக்கு நடிகர் திலீப், மீடியா வாயிலாக மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும், அப்படி இல்லையென்றால் அவரிடம் ரூ.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் லிபர்ட்டி பஷீர்.