டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா' என்கிற படம் வெளியானது. இந்தப்படம் மலையாளத்திலும் 'எண்டே பேரு சூர்யா எண்டே வீடு இந்தியா' என்கிற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜூன் படங்களுக்கு மட்டுமே கேரளாவில் மவுசு அதிகம்..
இந்தநிலையில் சினிமா விமர்சகரான அபர்ணா பிரசாந்தி என்பவர் இந்தப்படத்தை பார்த்துவிட்டு “படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தலைவலிக்க ஆரம்பித்து விட்டது” என சோஷியல் மீடியாவில் கருத்தை பதிவிட்டிருந்தார்..
இதனால் கோபமான அல்லு அர்ஜுனின் கேரள ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அபர்ணா பிரசாந்தி மீது கண்டன கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து தன்மீது கொலை மற்றும் கற்பழிப்பு அச்சுறுத்தல் விடுத்ததாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அபர்ணா பிரசாந்தி.