தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், 8 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் செம போத ஆகாதே. அதர்வா தயாரித்து, நடித்திருக்கிறார். அவருடன் மிஸ்தி, அனைகா, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்திருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:
படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. செம போதையில் ஹீரோ செய்யும் ஒரு சின்ன தவறு அவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை காமெடியாக சொல்லுகிற படம்.
போதையில் தான் தவறான முடிவெடுப்பார்கள். அந்த முடிவுகள் எத்தகைய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை சொல்லுகிறோம். சின்ன சபலம் மொத்த வாழ்க்கையையும் திருப்பி போட்டுவிடும். ஐ.டி இளைஞர்கள் வாழ்க்கை பின்னணியில் செல்லும் கதை. ஆக்ஷ்ன், காமெடி, காதல், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த ஜாலியான படம், சின்ன மெசேஜும் இருக்கும். என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.