'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. படத்தில் ஆதார் கார்டு, ஏடிஎம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி விமர்சிக்கப்படுகிறது. இது சில அரசியல் கட்சியினருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது. விஷால் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கும் மிரட்டல்கள் வருவதால் பல தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இரும்புத்திரை திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: இரும்புத்திரை படத்தில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் ஆதார் திட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கூறி சில அமைப்புகள் மிரட்டி வருகிறது. படம் ஓடும் தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்கள். எனவே படம் ஓடும் தியேட்டர்களுக்கு தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.