மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த ஒரு சினிமா விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா இந்து கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தார். அதோடு வைரமுத்துக்கு ஏதாவது நேர்ந்தால் தலை வெட்டவும் தயங்க மாட்டோம் என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் உள்ளது. எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி பிரமுகர் வி.ஜி.நாராயணன் என்பவர் வடபழனி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய வடபழனி போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.