‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் ஜெயராமின் மகனாக வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் கடந்த மூன்று வருடங்களில் காளிதாஸ் ஜெயராமல் இன்னும் ஒரு நல்ல அறிமுகத்தையே பெற முடியவில்லை.. தமிழில் அவர் அறிமுகப்படமாக நடித்த 'ஒருபக்க கதை' படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும், கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்தநிலையில் காளிதாஸுக்கு நல்ல நேரம் பிறந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.. ஆம் சில நாட்களுக்கு முன்புதான் அல்போன்ஸ் புத்ரன் தமிழில் இயக்கவுள்ள புதிய படத்தில் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. இப்போது இன்னும் ஒருபடி மேலான சந்தோஷமாக, பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் காளிதாஸ். இதை தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் காளிதாஸ்.
கடந்த ஜனவரியில் மோகன்லால் மகன் பிரணவை வைத்து ஆதி என்கிற நூறு நாள் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப் தற்போது இந்தியில் இம்ரான் ஹாஸ்மியை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். காளிதாஸும் அல்போன்ஸ் புத்ரன் படத்தை முடித்ததும் இந்த வருட இறுதியில் ஜீத்து ஜோசப் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.