‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்னும் வெளிராமல் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் அவரது இயக்கத்தில் 'NGK' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இந்தப் படத்தையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஏற்கெனவே 'அயன்', 'மாற்றான்' படங்களில் நடித்துள்ள சூர்யா, மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை முதலில் ஏஜிஎஸ் தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்த நிறுவனம் விலகி கொள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது.
பிரம்மாண்டமான முறையில் தயாராக இருப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். மோகன்லாலும், சூர்யாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது.
என்றாலும், இந்த படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த், ஏற்கெனவே மோகன்லாலுடன் 'தேன்மாவின் கொம்பத்து' உட்பட பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். பாப்கார்ன், ஜில்லா, உட்பட மோகன்லால் நடிப்பில் பல தமிழ்ப்படங்கள் வெளியானாலும் எந்தப்படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
கே.வி.ஆனந்த் - சூர்யா நடிக்கும் படமாவது இந்த சென்ட்டிமென்ட்டை உடைக்குமா?