இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சமந்தா, அர்ஜுன் நடித்த இரும்புத்திரை திரைப்படம் நேற்று வெளியானது. மத்திய அரசின் கனவுத் திட்டமான டிஜிட்டல் இந்தியா, கேஸ்லெஸ் இந்தியா, போன்றவை படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆதார் தகவல்கள் திருட்டு, வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடு தப்பி ஓட்டம் போன்றவை படத்தில் காட்டப்படுகிறது. இது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.
விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்றும் சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இரும்புத்திரை படம் திரையிடப்பட்டுள்ள சில தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஷால் வீடு மற்றும் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் கூறியதாவது : சமூகத்தில் நடந்து வரும் பிரச்னைகள், வருங்கால சந்ததிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகளைத் தான் படத்தில் பேசி உள்ளோம். யாருக்கும் எதிராகவோ, விமர்சித்தோ படத்தில் கருத்து சொல்லப்படவில்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் சட்டத்தை மதிக்கிறவன், காவல்துறையை நம்புகிறவன். எதிர்ப்புகள், போராட்டங்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். என்றார்.