அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஒருவரின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெறுவது பெரிய பாக்கியம். அந்த பாக்கியம் இசை அமைப்பாளர்கள் இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் கிடைத்திருக்கிறது. இருவருமே பல முறை தேசிய விருது வென்றவர்கள். ரகுமான் ஆஸ்கர் விருதையும், இளையராஜா சிம்பொனி இசையையும் வென்று சாதனை படைத்தவர்கள்.
நீட் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 11ம் வகுப்புக்கான தமிழ் பாடத்தில் இசைத்தமிழர் இருவர் என்ற பாடப் பிரிவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை இடம் பெற்றுள்ளது.
ஆனாலும் இளையராஜா குறித்த தகவல்களில் சில தவறாக இடம் பெற்றுள்ளது. இளையராஜா பெற்ற விருதுகள், பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் அவர் 1998ம் ஆண்டு ஆண்டு வாங்கிய லதா மங்கேர் விருதை 1988ல் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளனர். அதே போல 2013ம் ஆண்டு துவக்கப்பட்ட கேரள நிஷகாந்தி விருதை இளையராஜா 1995ம் ஆண்டே வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.