மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல நடிகை பூனம் கவுர். தென்னிந்திய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள், என் வழி தனி வழி, நாயகி படங்களில் நடித்தார்.
தற்போது தேவ் என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கும், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் மிகவும் நெருக்கம் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தன்னை ஒரு இயக்குனர் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக பூனம் கவுர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அதில் பதிவிட்டிருப்பதாவது:
அந்த டைரக்டருக்கு அதிக படங்கள் இல்லை. ஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறார். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகிறார், என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார். நான் அது குறித்து நேரில் கேட்டபோது ஒன்றும் தெரியாதவர் போல் பதில் சொன்னார். அவருக்கு வேண்டிய பெண்கள் மட்டுமே சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அவரை பற்றி வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் என்னிடம் இருக்கிறது. அவருக்கு வேண்டிய பெண்கள் தொடர்ந்து தோல்வி படம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பது ஏன் என்று புரியவில்லை. மற்றவர்கள் கலை உணர்வுகளை கொலை செய்கிறார். அவர் செய்யும் செயலே அவரை விரைவில் தண்டிக்கும்.
இவ்வாறு பூனம் கவுர் தெரிவித்திருக்கிறார்.
அந்த இயக்குனரின் பெயரை பூனம் கவுர் வெளியிடவில்லை. டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தும் இயக்குனர்தான் அவர் என்கிறார்கள்.