மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த தனது உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டபோது குளியில் அறையில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து 3 நாட்கள் விசாரணை நடத்திய துபாய் போலீசார். இது விபத்து மரணம் என்று சான்றிதழ் அளித்து ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
ஆனாலும் பிரபல பாலிவுட் இயக்குனர் சுனில் சிங், ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல. அதில் சந்தேகம் உள்ளது. இந்திய போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதற்கு முகாந்திரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் சுனில்சிங் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது மேல் முறையீட்டு மனுவில்...
"ஸ்ரீதேவியின் பெயரில் ஓமன் நாட்டில் 240 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அவர் அரபு நாட்டில் இறந்தால் மட்டுமே இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இதனையும், ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்ததையும் இணைத்து பார்க்கும்போது அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத்தின் தள்ளுபடியை உறுதி செய்தது.