பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் தற்போது வெளியாகியுள்ள படம் மகாநதி. கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா, ஒரு பத்திரிகை நிருபராக நடித்துள்ளார். இந்தப்படத்தில் நாக சைதன்யா, தனது தாத்தாவான மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ் வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி நாகசைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனா விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், மகாநதி படத்தில் என் மகன் நாகசைதன்யாவும், மருமகள் சமந்தாவும் நடித்துள்ளனர். இதில் என் மகன் நாக சைதன்யா எனது தந்தையான நாகேஸ்வரராவ் வேடத்திலேயே நடித்திருக்கிறார். இதுவரை எனக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் என் மகனுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் என் மகனை நினைத்து பொறாமையாகவும், அதேசமயம் பெருமையாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.