‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா தற்போது பாண்டிமுனி என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்தில் இந்தி நடிகர் ஷாக்கி ஷெராப் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நிகிஷா படேல். படத்தின் அறிமுக விழாவிற்கு வந்திருந்த அவர் அளித்த பேட்டி வருமாறு:
இந்தப் படத்தில் நான் நீலவேணி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நான் கிளாசிக்கல் நடன கலைஞர், கதகளியும் தெரியும். அதை பயன்படுத்தும் வகையில் இந்தப் படத்தின் கேரக்டர் அமைந்திருக்கிறது. தமிழில் இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும், தெலுங்கு படங்களில் இப்போதும் பிசியாக நடித்து வருகிறேன். தமிழில் நல்ல படங்கள் அமைவது அரிதாக இருக்கிறது. அப்படி அமையும்போது தவறாமல் நடிக்கிறேன்.
என்னை சிலர் நமீதாவுடன் ஒப்பிடுகிறார்கள். அதை நான் விரும்பவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எல்லா நடிகர், நடிகைகளும் எனக்கு நண்பர்களாகவும், தோழிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும். ஆனால் அதனை நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும்.
நான் எதையும் வெளிப்படையாக பேசுகிறவள், தைரியமானவள். இப்போதும் நான் ஒன்று சொல்கிறேன். பிரபுதேவா எனக்கு நெருக்கமான குடும்ப நண்பர். சினிமாவில் அவர்தான் மிகவும் நெருக்கம். அவரை பற்றி நான் முழுவதும் அறிவேன். அவரை நான் காதலிக்கிறேன் . அவர் சம்மதித்தால் அவரையே திருமணம் செய்து கொள்வேன். என்றார்.