'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை படம் நாளை வெளிவருகிறது. இந்தப் படத்தின் முதல் பாதியை (இடைவேளை வரை) ஹாலிவுட் பாணியில் மீடியாக்களுக்கு போட்டு காட்டினார்கள். அதன் பிறகு படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் நிருபர்களிடம் கூறியதாவது:
எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது. இரும்புத்திரை ஆதாரினால் ஏற்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல, டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்.
படத்தை பார்க்காமல் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே சிலர் வழக்கு போடுகிறார்கள். இவர்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இரும்புத்திரைக்கு தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. வெளியிட எல்லா உரிமையும் இருக்கிறது. இந்தப் படம் சில உண்மைகளை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும். எனது 5 வருட போராட்டம் இந்தப் படம். என்றார்.