டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அரசியலில் களம் காண உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார். சமீபத்தில் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். தொடர்ந்து நேற்று காலா படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார். இதில் அரசியல் தொடர்பான விஷயங்களை பெரிய அளவில் பேசவில்லை என்றாலும் தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் என்றார்.
இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் இந்த ஆலோசனை நடந்தது. இதில் 32 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனது அரசியல் கட்சி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். மேலும் கோவையில் மாநாடு நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டம் முடிந்த பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், ஜூன் 2 ம் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த எங்களுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம் என்றனர்.