'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் போன்று செயல்பட்டு வரும் இன்னொரு அமைப்பு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் நடக்கவில்லை. சிலர் தங்களை தாங்களே போட்டியின்றி தேர்ந்தெடுத்துக் கொண்டு செயல்பட்டு வந்தனர். இதை எதிர்த்து உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து விசாரித்து முடிவெடுக்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷாவை நீதிமன்றம் நியமித்தது.
விசாரணை மேற்கொண்ட அவர், உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற ஜூன் 10ந் தேதி தேர்தல் நடக்கிறது.
அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடக்கும் இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 21ந் தேதி முதல் 25ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். நிர்வாகிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும் செயற்குழு உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வேட்புமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.