Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும் : ரஜினி

09 மே, 2018 - 21:47 IST
எழுத்தின் அளவு:
Rajini-Speech-At-Kaala-Audio-Launch

ரஜினியின் காலா இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது....

இது காலா இசை வெளியீடு போன்று தெரியவில்லை. படத்தின் வெற்றி விழாவாக தெரிகிறது. சிவாஜி படத்தின் வெற்றி விழாவில் பேசி கவுரவித்தார் திமுக., தலைவர் கருணாநிதி. அவரின் குரலை கேட்க கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாய் நானும் ஆவலாய் உள்ளேன்.

ரோபோ படத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ உதவியாலும் ரசிகர்களின் பிரார்த்தனையாலும் மீண்டும் வந்தேன். நடிப்பை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. நான் நடித்து முடித்து விட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நதிகள் இணைப்பு கனவு
தென்னிந்திய நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு. அது நிறைவேறி நான் கண்மூடினால் கூட கவலையில்லை. தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை செல்கிறேன்.

அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது
புத்திசாலியுடன் பழகலாம், அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம்; மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை. யார் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் தொடர்ந்து செல்வேன்.

தனுஷ் என் மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை, நல்ல பையன், அப்பா - அம்மாவை மதிக்கிறார்.

காலாவில் அரசியல்

ரசிகர்களை மனதை வைத்து தான் படத்தின் கதையை கேட்கிறேன். கபாலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காலா படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். காலா அரசியல் படம் அல்ல, ஆனால் அரசியல் இருக்கிறது.

பெரிய இடம் காத்திருக்கிறது
ரஞ்சித் இயக்குநராக மட்டுமல்லாது, நிச்சயம் பெரிய ஆளாக வருவார். தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வர வேண்டும் என எண்ணுபவர். நிச்சயம் ரஞ்சித்திற்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. ரஞ்சித் திட்டமிட்டு படத்தை முடிப்பவர், தயாரிப்பாளர்களின் இயக்குநர்.

என்னை கவர்ந்த வில்லன்
நான் நடித்த இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு படத்தில் இரண்டு வில்லன்கள் தான் என்னை கவர்ந்தவர்கள் ஒன்று பாட்ஷா ஆண்டனி, மற்றொருவர் படையப்பா நீலாம்பரி. தற்போது அந்த வரிசையில் காலாவின் நானா படேக்கரும் இணைந்துள்ளார். அவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார்.

ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்
நான் ஏற்கனவே சொல்வது போன்று தாய், தந்தையரை முதலில் கவனியுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு இடம் கொடுங்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒரு கலர், எடை உள்ளது. எனவே மனதை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.

நல்ல நேரம் பிறக்கும்
கடமை இருக்கு, நேரம் பார்த்து வருவேன். நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்!

இவ்வாறு ரஜினி பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in