டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆன்மீக அரசியல் பக்கம் தமிழக மக்களைத் திருப்ப ஆசைப்படும் ரஜினிகாந்த், இது நாள் வரையில் நேரடியான அரசியல் படத்தில் நடித்ததில்லை என்ற குறையை காலா படம் தீர்த்து வைக்கும் போலிருக்கிறது.
படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களில் அதிகாரத்தை எதிர்ப்பது, நாட்டின் நிலைமையை எடுத்து சொல்வது, புரட்சி, போராட்டம் என பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது.
படம் வெளிவருவதற்கு முன்பாகவே சர்ச்சைகளை ஆரம்பித்து வைக்கும் என்பதை மட்டும் சொல்ல முடியும். அது பாடல்கள் வெளியான இன்றே ஆரம்பித்துவிட்டது என்பதே அதற்கு ஒரு சாட்சி.
காலா படத்தில் சொல்லப்படும் அரசியல், ரஜினிகாந்த் மீதான இமேஜை மாற்றுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள காலா படத்தில் சிறியதும், பெரியதுமாக மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
1.செம வெயிட்டு..
பாடல் எழுதியவர்கள் - அருண்ராஜா காமராஜ், டோபிடிலிஸ், லோகன்
பாடியவர்கள் - டோப் டாடி, ஸ்டோனி சைக்கோ, எம்சி மாவலி, அருண்ராஜா காமராஜ்
ரஜினிகாந்த் படம் என்றாலே ஹீரோயிசம் இல்லாத பாடலா ?. பொதுவாக அவருடைய படங்களில் அவரைப் பற்றி அவரே பாடுவது போலத்தான் இருக்கும். ஆனால், இந்தப் பாடலில் காலாவின் புகழை மற்றவர்கள் பாடுகிறார்கள். “தாராவி எங்க ஏரியா, இங்க காலா சேட் தான், அவரு முன்ன யார் ?, என ராப் ஸ்டைலில் காலாவின் புகழைப் பாடுகிறார்கள்.
2.தங்க சிலை...
பாடல் எழுதியவர்கள் - அருண்ராஜா காமராஜ்
பாடியவர்கள் - சங்கர் மகாதேவன், பிரதீப் குமார், அனந்து
வயதானாலும் கணவன், மனைவி இடையே இருக்கும் காதல் மாறவே மாறது. தங்கமான மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கை இனிமையாகவே நகரும். தன் மனைவியை “வாடி என் தங்க சிலை, நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்லை,”, “பேட்டைக்குள்ள பொல்லாதவன், நீ போட்ட கோட்ட தாண்டாதவன்,” என்ற வரிகள் காலா அவருடைய மனைவியை எப்படி நேசிக்கிறார் என்பதை புரிய வைக்கும்.
3.கற்றவை பற்றவை...
பாடல் எழுதியவர்கள் - கபிலன், அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜாம்ராக்
பாடியவர்கள் - யோகி பி, அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜாம்ராக்
அநியாயத்தைக் கண்டு பொங்கும் காலாவின் பாடல் போலத் தெரிகிறது. ஒத்த தல ராவணா, பத்து தல ஆவுடா, ஒத்தையில நிக்கிற வேங்கைடா, தில்லிருந்தா மொத்தமா வாங்கடா என காலாவை பொங்கி எழ வைக்கிறார்கள். தியேட்டரில் இந்தப் பாடலுக்கு கைதட்டல் அதிகம் ஒலிக்கலாம்.
4.கண்ணம்மா...
பாடல் எழுதியவர்கள் - உமாதேவி
பாடியவர்கள் - பிரதீப் குமார், தீ
படத்தில் இடம் பெற்றுள்ள மென்மையான, உருக வைக்கும் ஒரே பாடல் இதுதான். ஹுமா குரேஷி படத்தில் என்னவாக வருகிறார் என்று தெரியவில்லை. அவருடைய பிரிவுக்குப் பிறகு இந்தப் பாடல் வரலாம் போலிருக்கிறது. பிரிவின் வலியை உள்ளுக்குள் அடிக்க வைக்கிறார்கள்.
இந்தப் பாடல், அனந்து குரலிலும் தனியாக இடம் பெற்றிருக்கிறது.
5.உரிமையை மீட்போம்...
பாடல் எழுதியவர்கள் - அறிவு
பாடியவர்கள் - விஜய்பிரகாஷ், அனந்து
படத்தின் ஆரம்ப வரிகளே இது எந்த மாதிரியான பாடல் என்பதைப் புரிய வைக்கிறது. கூடியிருக்கும் மக்களையும் போராட வாருங்கள் என அழைக்கும் ஒரு பாடலாக இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. “யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா” என அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி பாதிக்கப்பட்டவர்கள் வலியால் கேட்கும் கேள்விகளாக இப்பாடல் இருக்கிறது. நிலத்தை மீட்டெடுக்கக் குரல் கொடுக்கும் பாடலாக போராட்டத்தை முன்னெடுக்கிறது இந்தப் பாடல்.
6.போராடுவோம்...
பாடல் எழுதியவர்கள் - டோபிடெலிஸ், லோகன்
பாடியவர் - டோபிடெலிஸ்
மற்றுமொரு புரட்சிப் பாடல் இது. முற்றிலும் ராப் வகையில் அமைந்திருந்தாலும் அதில் பல அர்த்தங்களை உள்ளீடு செய்திருக்கிறார்கள். கூடவே ஹிந்தி வரிகளும் இடம் பெற்றுள்ளன. ஆன்மீக அரசியல் நோக்கி பயணிக்க இருக்கும் ரஜினிகாந்த் படத்தில் கோயிலில் உள்ள சாமிகளுக்குக் காணிக்கை கொடுப்பதையும் குற்றம் சொல்கிறது இந்தப் பாடல். “காணிக்கை பேரில் இங்கே, கல் சிலைக்கும் லஞ்சம் கோடி, கோடி குமியுது, நாட்டில் ஆனால் பஞ்சம்,” என கூறுகிறார்கள். சாமிக்கு காணிக்கை செலுத்துவது எப்படி லஞ்சம் என்று சொல்வார்களா ?.
7.தெருவிளக்கு
பாடல் எழுதியவர்கள் - டோபிடெலிஸ், லோகன்
பாடியவர்கள் - டோபிடெலிஸ், முத்தமிழ்
வறுமையில் வாழ்ந்தாலும் வரலாறு படைப்போம் என்ற தன்னம்பிக்கைப் பாடல் இது. “புரட்சியாய் பேசும் போது, அதை நீயும் கேட்டுக்கோ, நம்பிக்கை இல்லை என்றால், இங்கே வந்து பாத்துக்கோ,” என நம்பிக்கை இல்லாதவர்களையும், தன்னம்பிக்கை பக்கம் அழைக்க வருகிறது இந்தப் பாடல். 5, 6, 7 ஆகிய பாடல்கள் கருத்து சொல்லும் பாடல்களாகவே அமைந்துள்ளன.
8.நிக்கல் நிக்கல்
பாடல் எழுதியவர்கள் - டோபிடெலிசிஸ், லோகன்
பாடியவர்கள் - டோபிடெலிசிஸ், விவேக், அருண்ராஜா காமராஜ்
நிக்கல் நிக்கல் சல்தே ரே என ஹிந்தியில் ஆரம்பமாகிறது பாடல். பின்னர் கிளம்பு கிளம்புடா, அந்து போச்சி என யாருக்கோ சவால் விடும் பாடலாக இருக்கிறது. டேய்..டேய்.. எனவும் விரட்டுகிறார்கள். திரும்பி கொடுத்தால் தாங்க மாட்ட என இன்றைய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்தே இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.
9.கண்ணம்மா கண்ணம்மா
இந்தப்பாடல் அனந்து குரலிலும் தனியாக இடம் பெற்றிருக்கிறது.
காலா படத்தின் பாடல்கள் அனைத்துமே சந்தோஷ் நாராயணின் வழக்கமான இசை போன்று அமைந்தாலும் வேறு ஒரு தளத்தில் அமைந்துள்ளது.
கபாலி படம் இரண்டு தாதாக்களைப் பற்றிய படமாக இருந்தது. ஆனால், இந்தப் படம் தாராவி, மக்கள் பிரச்சினை, மக்களுக்கான தலைவன் என சமுதாயக் கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதால் பாடல்களும் வேறு தளத்தில் உள்ளன.