'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினி, கட்சித் துவங்கும் முன்பாக, தன்னுடைய ரசிகர் மன்றத்தை, நற்பணி மன்றமாக பெயர் பதிவு செய்தார். அந்த மன்றமே, ரஜினியின் புதிய கட்சிக்கான அடிப்படையாக செயல்படும் என்று நினைத்தே, ரஜினி, அதன் வழியில் செல்கிறார்.
அந்த ரசிகர் மன்றத்துக்கான மாவட்ட நிர்வாகிகளை தொடர்ந்து நியமித்து வருகிறார். ஆனால், அந்த நிர்வாகிகளில் பலர் மீது, நிறைய புகார்கள் இருப்பதால், அவர்கள் மீதெல்லாம் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. அவர்களில் சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரசிகர் மன்ற நிவாகிகள் மீது வரும் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் கட்சியின் சிலரை புதிய நிர்வாகிகளாக நியமித்திருக்கிறார் ரஜினி. அதாவது, ஒழுங்கு நடவடிக்கைக் குழு. மன்ற நலனுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு சரிபண்ண பார்க்கலாம். முடியவில்லை என்றால், அவர்களை கட்சியில் இருந்தே கூட விரைவில் நீக்கி விடலாம் என ரஜினி கூறியதாக மன்றத்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.