அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் முன்னணி நடிகைகளில் முதன்மையானவர் நயன்தாரா. அவரைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும், அது அவருடைய திரையுலக வாழ்க்கையைப் பாதித்தது இல்லை. இப்போதும் அவரைத் தேடி பல புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ், தெலுங்கில் இருக்கும் சில முன்னணி நடிகர்களுக்கு நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் ஆசை அதிகம். ஒரு முறை நடித்தவர்கள் கூட மீண்டும் நடிக்க முடியுமா என அவரிடம் தூதுவிடுவதாகவும் தகவல். தனக்கான படங்களை நயன்தாராவே முடிவு செய்கிறார். அதில் யாருடைய தலையீடும் இல்லை என்கிறார்கள்.
தற்போது தெலுங்கில் 'சை ரா' படத்திலும், தமிழில் 'விஸ்வாசம்' படத்திலும் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, வேலைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர உள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள அந்தப் படத்தை மிகக் குறுகிய காலத்தில் சுமார் 50 நாட்களில் எடுத்து முடிக்க உள்ளனர். சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா என்று செய்தி வந்ததுமே பொறாமையில் பலர் பொங்கியதாக ஒரு தகவல்.
நயன்தாரா நடித்த படங்களில் முக்கியமான வெற்றிப் படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் இருப்பதால், அந்தப் படத்தை இயக்கிய ராஜேஷுக்காகவும் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயனை விடவும் நயன்தாராவுக்குக் கூடுதல் சம்பளம் என்பது கூடுதல் தகவல்.
பழைய பஞ்சாயத்திற்காக சிவகார்த்திகேயன் நடித்துக் கொடுப்பதால்தான் குறைவான சம்பளம், வேறு ஒன்றுமில்லை.