டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்காமல், மலையாள நட்சத்திரங்கள் பலர் புறக்கணித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்ட சில பேர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும், மீதியுள்ளவர்களுக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கையால் விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டது தான் இவர்கள் விழாவை புறக்கணிக்க காரணம்..
விழாவை புறக்கணித்தவர்கள் மீது பலவிதமான விமர்சனங்கள் வீசப்பட்டு வருகின்றன.. ஆனாலும் மிக முக்கியமான இடத்தில் இருந்து, அதாவது கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் இருந்து இவர்களுக்கு ஆதரவாக குரல் வெளிவந்துள்ளது. இவையெல்லாம் மத்திய அரசின் வெறுப்பின் காரணமாகவே நடந்தது என அவர் கூறியுள்ளார்.