ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் மலையாள திரையுலகம் நட்சத்திர கலைவிழா நடத்தி முடித்தது அல்லவா..? அதற்கு முன்பாக மீடியாவிடம் பேசிய நடிகர் சங்கத்தலைவர் இன்னொசன்ட், மலையாள திரையுலகில் யாரிடமும் நான் தான் பெரியவர் என்கிற ஈகோ கிடையாது. ஆனால் மற்ற மொழிகளில் அது இருக்கிறது என கூறியுள்ளார்.
அதற்கு உதாரணம் கூறும் விதமாக, பத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'டுவென்ட்டி-2௦'படத்தின் ரீமேக் உரிமையை பல மொழிகளில் வாங்கிச் சென்றும் கூட இன்னும் யாராலும் படமாக்க முடியாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதற்கு காரணம் மற்ற மொழிகளில் நிலவும் ஈகோ தான் என கூறியுள்ளார் இன்னொசன்ட். சரி.. அது என்ன 'டுவென்ட்டி-2௦..?
கடந்த 2008ல் மலையாளத்தில் வெளியான 'டுவென்ட்டி-2௦' என்கிற படம், மலையாள சினிமா வரலாற்றில் மிகமிக முக்கியமான படம். மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அந்தப்படத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி உள்ளிட்ட மலையாள திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஏதாவது ஒரு ரோலிலாவது எந்த ஈகோவும் இல்லாமல் நடித்திருந்தனர்.
அவ்வளவு ஏன்..? பிருத்விராஜும் நயன்தாராவுடன் கூட ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடிவிட்டு போனார்கள். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. நம்ம ஊரில் ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லோரையும் ஒரே படத்தில் நடிப்பது போல நினைத்து கூட பார்க்க முடியுமா..?